tag:blogger.com,1999:blog-55443439870241436102024-03-04T20:26:08.972-08:00சத்திய பாதை இஸ்லாம்sathiya pathai islamhttp://www.blogger.com/profile/03681383666404797056noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5544343987024143610.post-36525111592172745872014-12-24T11:10:00.001-08:002014-12-24T11:10:25.166-08:00பாகஸ்த்தர்களின் பட்டியல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeZrdNDWKrwKnVp5aB5SYLtAbb4aY46iHBxkmYGx4n0ZceFLZcS_1GCMHMMVPPRNlruL20Qd-9Q6BIPc91WgZZeJbAimO4eAv5g_Ov3EtlNmZSM5p5iCB5W-cIotsNRSz8wZcacN6iGO0/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeZrdNDWKrwKnVp5aB5SYLtAbb4aY46iHBxkmYGx4n0ZceFLZcS_1GCMHMMVPPRNlruL20Qd-9Q6BIPc91WgZZeJbAimO4eAv5g_Ov3EtlNmZSM5p5iCB5W-cIotsNRSz8wZcacN6iGO0/s1600/image.jpg" height="219" width="320" /></a></div>
அல்லாஹ்வின் திருபெயரால் ....<br />
<br />
முன் தலைப்பில் கூறப்பட்டுள்ள வசனங்களின் அடிப்படையில் பாகங்கள் 1/2 1/4 1/8 2/3 1/3 1/6 என்று ஆறு பிரிவுகளாக பிரிக்கப்படுள்ளன . அவற்றை பெறக்கூடிய வாரிசுகளும் பிரிவினர்களாக இருக்கின்றனர் . அவற்றை விரிவாகப்பார்ப்போம்.<br />
<a name='more'></a><br />
<br />
1..2ல் ஒன்று பெறக்கூடியவர்கள் ஐந்து நபர்களாகும் .<br />
<br />
1. கணவன் .. குழந்தைகள் இல்லாதநிலையில் மனைவி காலமாகிவிட்டாள் அவளுடைய சொத்தில் சரிபாதி கிடைக்கும்.<br />
<br />
2. மகள்.. இறந்தவருக்கு ஒரே மகள் மட்டும் இருந்தால் , அவனுக்கு 2ல் ஒன்று கிடைக்கும்.<br />
<br />
3. மகனின் மகன் .. இறந்தவருக்கு பிள்ளைகளோ வேறு பேரன் பேத்திகளோ இல்லையானால் 2ல் ஒன்று கிடைக்கும்.<br />
<br />
4. தாய் தந்தை வழி சகோதரி.. இறந்தவருக்கு வேறு எந்த வாரிசுமில்லாமல் அவள் மட்டுமிருந்தால் 2ல் ஒன்று கிடைக்கும் .<br />
<br />
5.தந்தை வழி சகோதரி.. இறந்தவருக்கு நம்பர் 4ல் கூறப்பட்ட சகோதரியோ வேறு வாரிசுகளோ இல்லையானால் அவளுக்கு 2ல் ஒன்று கிடைக்கும்.<br />
<br />
2-4ல் ஒன்று பெறக்கூடியவர்கள் 2 நபர்களாகும் .<br />
<br />
1. கணவன்.. குழந்தைகள் இருக்கும் நிலையில் மனைவி காலமாகிவிட்டாள் அவருக்கு 4-ல் ஒன்று கிடைக்கும்.<br />
<br />
2. மனைவி.. குழந்தைகள் இல்லாத நிலையில் கணவன் காலமாகிவிட்டால் அவளுக்கு 4ல் ஒன்று கிடைக்கும்.<br />
<br />
3. எட்டில் ஒன்று பெறக்கூடியவர்கள் ஒரே நபராகும்.<br />
<br />
1. மனைவி .. குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவன் காலமாகிவிட்டால் மனைவிக்கு 8ல் ஒன்று கிடைக்கும்.<br />
<br />
4-3ல் இரண்டு பெறக்கூடியவர்கள் நான்கு நபர்களாகும் .<br />
<br />
1. பெண் பிள்ளைகள்.. இறந்தவருக்கு ஆண் வாரிசில்லாமல் இரண்டோ அதற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளோ இருந்தால் , அவர்களுக்கு 3ல் இரண்டு பாகம் கிடைக்கும்,, அவர்கள் அதனை பகிர்ந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
2. மகன் வழிப்பேத்தி .. இறந்தவருக்கு ஆண் , பெண் மக்கள் இல்லாமல் மகன் வழி - பேத்திகள் மட்டும் இரண்டோ அதை விட அதிகமோ இருந்தால் அவர்களுக்கு 3ல் இரண்டு பாகம் கிடைக்கும்.<br />
<br />
3. தாய் தந்தை வழி சகோதரிகள்.. இறந்தவருக்கு தந்தை, மகன் மகள் , மகனின் மகள் , தாய் தந்தை வழி சகோதரரர்கள் போன்ற வாரிசுதாரர்கள் இல்லாத நிலையில் அச் சகோதரிகளுக்கு 3ல் இரண்டு பாகம் கிடைக்கும்.<br />
<br />
4. தந்தை வழி சகோதரிகள் .. இறந்தவருக்கு நம்பர் 2.3ல் கூறப்பட்டுள்ள நபர்களோ மற்ற வாரிசுகளோ இல்லாத நிலையில் அச் சகோதரிகளுக்கு 3ல் இரண்டு பாகம் கிடைக்கும்.<br />
<br />
5. சொத்தில் 3ல் ஒரு பாகம் பெரும் நபர்கள் இரண்டு நபர்களாகும் .<br />
<br />
1- தாய்.. இறந்தவருக்கு பிள்ளைகளோ , மகனின் பிள்ளைகளோ , சகோதர சகோதரிகளில் இருவர்கள் அதற்கு அதிகமானவர்களோ இல்லையானால் தாய்க்கு 3ல் ஒன்று கிடைக்கும்.<br />
<br />
2- தாய் வழி சகோதர சகோதரிகள்.. இறந்தவருக்கு பிள்ளைகள், மகன் வழிபிள்ளைகள் , தகப்பன் , பாட்டன் போன்ற வாரிசுகள் இல்லாத நிலையில் அச்சகோதரிகள் இருவரோ அதற்கு அதிகமோ இருந்தால் அவர்களுக்கு 3ல் ஒன்று கிடைக்கும்.<br />
<br />
6-6 ஒன்று பெறுபவர்கள் 8 நபர்கள் ஆகும் .<br />
<br />
1- தந்தை.. இறந்தவருக்கு பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இருந்தால் , அவருடைய சொத்தில் தந்தைக்கு 8ல் ஒன்று கிடைக்கும் .<br />
2- பாட்டன்.. இறந்தவருக்கு பிள்ளைகளோ, மகனின் பிள்ளைகளோ இருந்து தகப்பன் இல்லையானால் பாட்டனாருக்கு 6ல் ஒன்று கிடைக்கும்.<br />
<br />
3- தாய். இறந்தவருக்கு குழந்தைகள் மகனின் குழந்தைகள் , சகோதர சகோதரிகள் இருவரோ பலரோ இருக்கும் நிலையில் தாய்க்கு 6ல் ஒன்று கிடைக்கும்.<br />
4-மகனின் மகள் .. இறந்தவருக்கு ஒரு மகள் மட்டும் இருந்தும் மகனின் மகளுடன் ஆண் இல்லாத நிலையில் அவளுக்கு 6ல் ஒன்று கிடைக்கும் .<br />
<br />
5-தகப்பன் வழி சகோதரி.. இறந்தவருக்கு சகோதரி இல்லாமல், தாய் தந்தை வழி சகோதரி ஒருத்தியிருந்து அவளுடன் ஆண் இல்லாத நிலையில் அச்சகோதரிக்கு 6ல் ஒன்று கிடைக்கும்.<br />
<br />
தாய் வழி சகோதரன் , சகோதரி.. இறந்தவருக்கு பிள்ளைகளோ , மகனின் பிள்ளைகளோ, தந்தையோ, பாட்டனோ, இல்லாமலிருந்து , அந்த சகோதரன் ஒருவனோ அல்லது ஒருத்தியோ இருந்தால் 6ல் ஒன்று கிடைக்கும்.<br />
<br />
8- பாட்டி [தாய், தந்தை வழிப் பாட்டிகள் ] தாய் இல்லாவிட்டால் தாயின் தாயும் , தந்தை இல்லாவிட்டால் தந்தையின் தாயும் வாரிசாவார்கள் .<br />
<br />
மேல் குறிப்பிடப்பட்டுள்ள பாக்க விகிதாச்சாரங்கள் அதில் குறிப்பிட்டுள்ள வாரிசுதாரர்கள் இருக்கும்போது மட்டுமே உள்ள சட்டங்களாகும். மாறாக வாரிசுதாரர்கள் கூடுதல் குறைதல் மாறுதல் ஆகும்போது அந்த விகிதாச்சாரங்க லும் மாறுதல் அடையும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களாகும்.<br />
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்<br />
அடுத்த தலைப்பு ... பெற்றோர்களின் சொத்துக்கள்<br />
அல்லாஹ் மிக்க அறிந்தவன். </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/03681383666404797056noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5544343987024143610.post-50890548811031603062014-08-18T07:21:00.002-07:002014-08-18T07:21:58.828-07:00பாகப்பிரிவினைக்கு முன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrdWCE21YEL63LEkIt0p4Dx0RgMueISDmajgyrYH-FBh50wUQ-LyhukgPV-Qq01NNp0fdsv2dfst1T2gGluGP0v9Wz7feqrwb1xw-2QYJbBZLKLFRHONJg0pcFlV86M7indYxzwiOFadg/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrdWCE21YEL63LEkIt0p4Dx0RgMueISDmajgyrYH-FBh50wUQ-LyhukgPV-Qq01NNp0fdsv2dfst1T2gGluGP0v9Wz7feqrwb1xw-2QYJbBZLKLFRHONJg0pcFlV86M7indYxzwiOFadg/s1600/image.jpg" /></a></div>
அல்லாஹ்வின் திருபெயரால் ......<br />
இஸ்லாமிய வாரிசுரிமை சட்டம் தொடர்ச்சி............<br />
<br />
<br />
பாகப்பிரிவினைக்கு முன் ..<br />
<br />
பாகப்பிரிவினையின் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதாவது இறந்தவர் கடன்பட்டிருக்கிறாரா, யாருக்கு வசியத் [மரணம் சாசனம்] செய்திருக்கிறாரா, அல்லது மனைவிக்கு மஹர் தொகை கொடுக்காமல் இருந்து விட்டாரா என்பதைஎல்லாமரிந்து அவைகளுக்கு கொடுத்தது போக மீதமுள்ள சொத்தைத்தான் பாகம் பிரிக்க வேண்டும்.<br />
<a name='more'></a><br />
<br />
மேல் கூறப்பட்ட சட்டங்களே இஸ்லாமிய வாரிசுரிமைக்கு மூலமாக திகழக்கூடிய சட்டங்களாகும், இவற்றில் வாரிசுதாரர்கள் கூடுதல் குறைதல், இறப்பில் யார் முன் யார் பின் இறந்திருக்கிறார்கள் என்ற விபரம், நேரடியான வாரிசுகள் இல்லாத போது வேறு யார் வாரிசாக வருவார்கள் , பாட்டன் , பாட்டி, பேரன் , பேத்தி, சகோதரன், சகோதரி ஆகியோர்கள் எப்போது வாரிசாக வருவார்கள் என்பன போன்ற பல உட்பிரிவுகளும் மேலும் பல நுட்பமான விஷயங்களும் வாரிசுரிமை சட்டத்தில் நிறைய இருக்கின்றன.<br />
<br />
எனவே, பாகஸ்த்தர்கள் பாகம் பிரிக்கின்றபோது, வாரிசுதாரர்கள் யார் யார் என்பதை தெளிவாக எழுதி வேலூர் , நீடுர் , லால்பேட்டை போன்ற அரபிக்கலுரிகளுக்கு எழுதி கேட்டால் அவர்கள் ஷரீ அத் சட்டப்படி யார் யாருக்கு எந்தெந்த விகிதாச்சாரத்தில் சொத்துக்களை பிரித்து தரவேண்டும் என்ற விபரத்தை மார்க்கத்தீர்ப்பெனும் ... பத்வாவாக கொடுத்து விடுவார்கள் அதன்படி சொத்துக்களை பிரித்துக்கொள்ள வேண்டும்.<br />
<br />
<br />
வாரிசுதார்களும் -பாகங்களும்<br />
<br />
ஒருவர் காலமாகிவிட்டால் , அவருடைய சடங்குகள் முடிந்த பிறகு, அடுத்தக்கட்டமாக தலை தூக்குவது சொத்துப்பிரச்ச்னை தான், அவருக்கு எங்கெங்கே என்னென்ன சொத்துக்கள் இருக்கின்றன. கையிருப்பிலும் பேங்குகளிலும் எவ்வளவு ரொக்கம் இருக்கிறது , பொருளாக என்னென்ன இருக்கின்றன என்பன போன்ற பொருளியல் புள்ளி விபரங்களை வாரிசுதார்கள் கணக்கெடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.<br />
<br />
அவர்களில் சரியான வாரிசுதாரர்கள் யார் யார் , யார் யாருக்கு எந்தெந்த விகிதாச்சாரத்தில் பாகங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதிமுறைகளை அடுத்து வரும் திருமறை வசனங்கள் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன.<br />
<br />
பாகபிரிவினையில் உங்களுடைய மக்களின் விஷயத்தில் ஒரு ஆணுக்கு இரு பெண்களின் பங்கை போன்றது உண்டு என்று அல்லாஹ் உங்களுக்கு கட்டளை இடுகிறான் அவர்கள் இரு பெண்களாக [அல்லது] இரண்டுக்கு -மேல்பட்ட பெண்களாக இருந்தால் [இறந்த] அவர் விட்டுச் சென்ற [சொத்] திலிருந்து மூன்றில் இரண்டு [பாகம்] அவர்களுக்கு உண்டு, ஒருத்தியாக அவள் இருந்தால், அவளுக்கு பாதி சொத்து உண்டு, [இறந்து விட்ட] அவருக்கு குழந்தை இருந்தால் [இறந்தவராகிய] அவருடைய பெற்றோருக்கு அவ்விருவரிலிருந்து ஒவ்வொருவருக்கும் அவர் விட்டுச் சென்ற [சொத்] திலிருந்து ஆறிலொன்று உண்டு. அவருக்கு குழந்தை இல்லையென்றால், அவருடைய பெற்றோர் அவருக் வாரிசுக்காரர்களானால் , அப்போது அவருடைய தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு [மீதி இரண்டு பாகங்கள் தந்தைக்கு] அவருக்கு சகோதரர்கள் இருந்தால் அப்பொழுது [பெற்றோர் இருவரில்] அவருடைய தாய்க்கு ஆறிலொன்று தான் [கிடைக்கும் மீதி அனைத்தும் தந்தைக்கு கிடைக்கும் இந்த சட்டமாகிறது] எதனை அவர் வசியத்து செய்திருந்தாரோ அந்த வசியத்திற்க்கும் கடனுக்கும் [கொடுத்தது போக] உள்ளது ஆகும். [அல்குர் ஆன் ,4-11<br />
<br />
உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் அவர்களுக்கு குழந்தை இல்லையானால்- உங்களுக்கு பாதி [பாகம்] உண்டு, அவர்களுக்கு குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து எதனைக் கொண்டு அவர்கள் வசியத் செய்தார்களோ, அந்த வசியதிற்கும் கடனுக்கும் [கொடுத்த] பிறகு' உங்களுக்கு நான்கில் ஒன்று உண்டு, உங்களுக்கு குழந்தை -இல்லாதிருப்பின்- நீங்கள் விட்டுச்சென்ற திலிருந்து [உங்களின் மனைவியராகி ] அவர்களுக்கு நான்கிலொன்று உண்டு, உங்களுக்கு குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து எதனைக்கொண்டு நீங்கள் வசியத் செய்தீர்களோ அந்த வசியத்துகும் கடனுக்கும் [கொடுத்த] பிறகு அவர்களுக்கு [மனைவியருக்கு[ எட்டில் ஒன்று உண்டு , ஆனந்தரங்க்கொள்ளப்படுகின்ற இறந்து விட்ட ஒரு ஆண் அல்லது ஒரு பெண் [தந்தை குழந்தை போன்ற] எந்த வாரிசும் இல்லாதவராக இருந்தால் இன்னும் அவருக்கு [தாய் ஒன்றான] ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ இருந்தால் அவ்விருவரிலிருந்து ஒவ்வொருவருக்கும் ஆறிலொன்று உண்டு, [சகோதர சகோதரிகளாகிய] அவர்கள் அதைவிட [ஒருவரைவிட] அதிகமாக இருந்தால் எதைக்கொண்டு வசியத்து செய்யப்பட்டதோ அந்த வசியத்திற்கும், கடனுக்கும் [கொடுத்த] பிறகு [மீதியில்] மூன்றில் ஒன்றில் அவர் அனைவரும் கூட்டாளிகளாவார்கள் சமபங்குடையவர் களாவார்கள் .<br />
அல்குர் ஆன் ,4-12]<br />
<br />
நபியே! ] உம்மிடம் [கலாலா பற்றி] அவர்கள் தீர்ப்பு கேட்கின்றனர்,, 'கலாலா' பற்றி அல்பாஹ் உங்களுக்கு [பின் வருமாறு] தீர்ப்பளிக்கிறான் என்று கூறுவீராக,, எவரேனும் ஒரு மனிதர் இறந்து, அவருக்கு குழந்தை இல்லாமல் ஒரு சகோதரி [மட்டும்] அவருக்கு இருந்தால் அப்பொழுது அவளுக்கு அவர் விட்டுச் சென்ற [சொத்]தில் பாதி உண்டு ,, [மாறாக ஒரு பெண் இறந்து ] அவளுக்கு குழந்தை இல்லையானால் சகோதரனாகிய அவன் அவனு[டைய சொத்து முழுதுக் ] கும் வாரிசாவான், [சகோதரரிகலான ]அவர்கள் இரு பெண்களாக இருந்தால் அவன் விட்டுச்சென்ற [சொத்]திலிருந்து மூன்றில் இரண்டு [பாகம்] அவ்விருவருக்கும் உண்டு , ஆண்களும் பெண்களுமான உடன் பிறந்தவர்களாக அவர்கள் இருந்தால் அப்பொழுது இரண்டு பெண்களின் பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு.[அல்குர் ஆன், 4-177]<br />
<br />
மேல் கூறப்பட்ட அந்த மூன்று இறை வசனங்களே இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்களுக்கு மூலாதாரமாகும். அவ்வசனங்களையும் நபி [ஸல்] அவர்களின் விளக்கங்களையும் அடிப்படையாக வைத்து அருமையான முறையில் வடிவமைக்கப்பட்ட சட்டங்களே ஷரீ அத் கூறும் வாரிசுரிமை சட்டமாகும்.<br />
<br />
திருமறையில் கூறப்பட்டுள்ள அச்சட்டங்களை வாசகர்கள் இலேசாக புரிந்து கொள்ளத் தோதுவாக கேள்வி பதிலின் முறையில் தொகுத்து இன்ஷாஅல்லாஹ் அடுத்த கட்டுரையில் தரப்படும் ........<br />
இன்ஷாஅல்லாஹ் இன்னும் விபரங்களும், விளக்கங்களும் தொடரும்..............<br />
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு .. பாகஸ்த்தர்களின் பட்டியல் என்ற தலைப்பில் பார்க்கவும் .</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/03681383666404797056noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5544343987024143610.post-55504748952107250732014-06-15T05:58:00.000-07:002014-08-18T06:13:06.656-07:00உயிலும் -பத்திரமும் செல்லுபடியாகுமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdmyZioQZo_4HVpnmn8ynpcmnWE1VgJkaKHgyUZLHT4KJrtqPwfApPD2kUE9JBJ-542UlZSl6r6B-VuB1CYe0YjAVeqRQw2m22nqN2t8RZou-N6v9HB5I0cchutCiYmBXfSVcOqUsKjM4/s1600/image.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdmyZioQZo_4HVpnmn8ynpcmnWE1VgJkaKHgyUZLHT4KJrtqPwfApPD2kUE9JBJ-542UlZSl6r6B-VuB1CYe0YjAVeqRQw2m22nqN2t8RZou-N6v9HB5I0cchutCiYmBXfSVcOqUsKjM4/s1600/image.gif" /></a></div>
அல்லாஹ்வின் திருபெயரால் .......<br />
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!<br />
<br />
பாகப் பிரிவினை -வாரிசுரிமை சட்டங்கள் தொடர்ச்சி......<br />
<br />
உயிலும் -பத்திரமும் செல்லுபடியாகுமா?<br />
<br />
உயில் என்பது ஒருவர் தன்னுடைய காலத்துக்குப்பிறகு தன்னுடைய சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு சேர வேண்டும் என்ற விபரத்தை தன்னுடைய ஜீவிய காலத்திலேயே எழுதி வைத்து விடுவதாகும். இவ்வாறு எழுதப்படும் அந்த உயில் ஷரீ அத் சட்டப்படி செல்லத்தக்கதல்ல இதனை புரிந்து கொள்ளாத சிலர் உயிலை எழுதி வைத்துவிட்டு காலமாகிவிடுகிரார்கள். இத்தகைய உயிலால் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்பதை இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.<br />
<a name='more'></a><br />
<br />
அதே போன்று சிலர் என்னுடைய காலத்துக்குப்பிறகு என்னுடைய சொத்து இன்ன இன்னாருக்கு இவ்வளவு இவ்வளவு என்று பத்திரம் எழுதி பதிவகத்தில் பதிந்தும் விடுகிறார்கள் இதுவும் செல்லத்தக்கதல்ல ஷரீ அத் சட்டப்படிதான் பாகம் பிரிக்கப்படும் . மேலும் சில விஷயங்களையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் அதாவது சொத்துக்குரிய ஒருவர் ஜீவித்திருக்கும் போதே, அவருடைய பிள்ளைகளோ, மற்ற வாரிசுதாரர்களோ நாங்கள் தான் உங்களுடைய சொத்துக்கு வாரிசாக வரக்கூடியவர்கள்,, எனவே இப்போதே எங்களுக்கு சொத்தை பிரித்து கொடுத்து விடுங்கள் என்று கேட்க முடியாது.<br />
<br />
ஏனெனில் ஒருவர் ஜீவித்திருக்கும் காலமெல்லாம் அவருடைய சொத்து அவருக்கு மட்டுமே சொந்தமானதாகும் அதில் யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அவர் அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம், அவர் விரும்புகிறவர்களுக்கு கொடுக்கவும் செய்யலாம். அதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் அவராக முன் வந்து பாகஸ்த்தர்களுக்கு சொத்துகளை பிரித்து கொடுத்து விடலாம். இதற்கு ஷரீ அத் தில் எந்த தடையுமில்லை. மேலும் வாரிசுரிமை என்பது ஒருவர் காலமாகிவிட்ட பிறகு ஏற்படக்கூடியது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியமாகும்.<br />
<br />
வசியத்- மரண சாசனம் ~~~<br />
<br />
வசியத் என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் , இருப்பினும் அதனுடைய முழு விபரத்தையும் தெளிவாக தெரிந்துகொள்வது அவசியமாகும்.<br />
<br />
அதைப்பற்றி திருக்குர் ஆன் , நம்பிக்கை கொண்டோரே உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி, அவர் மரண சாசனம் செய்திருந்தால் உங்களைச் சேர்ந்த இருவர் அதற்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. 5..106]<br />
<br />
இந்த வசனம் நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் யாரும் வசியத் செய்ய முடியாது. எவர் வியாதியால் பாதிக்கப்பட்டு, தமக்கு மரணம் நெருங்கிவிட்டது என்பது உணர்ந்து கொள்கிறாரோ அவரே வசியத் செய்ய முடியும் என்பதையும், வசியத் செய்பவர் அவசியம் இரண்டு சாட்சிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கிக்காட்டுகிறது.<br />
<br />
மொத்த சொத்தில் எந்த அளவு வசியத் செய்யலாம் என்ற விபரத்தை அடுத்து வரும் ஹதீஸ் விளக்குகிறது.<br />
<br />
நபித்தோழர் ஸஃ து [ரலி] அவர்கள் நபி [ஸல்] அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! நான் என்னுடைய சொத்து அனைத்தையும் அறப்பணிக்காக வசியத் [மரண சாசனம்] செய்து விடட்டுமா? என்று வினவுகின்றனர், அதற்கு நபி [ஸல்] அவர்கள் அன்பு நண்பரே! உம்முடைய சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை வசியத் செய்யும், அதுவும் கூட அதிகம் தான் என்று கூறினார்கள்.<br />
புகாரீ]<br />
<br />
இந்த ஹதீஸ் , ஒருவர் தம்முடைய முழு சொத்தையோ அல்லது பாதி சொத்தையோ வசியத் செய்திருந்தாலும் கூட மூன்றில் ஒரு பகுதிதான் செல்லுபடியாகும், அந்த அளவுதான் கொடுக்க வேண்டும் என்ற கருத்தினை தெரிவிக்கிறது. இந்த அடிப்படையிலே தான் ஷரீ அத் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்.......<br />
அல்லாஹ் மிக அறிந்தவன் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/03681383666404797056noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5544343987024143610.post-63965303196464501362014-06-08T06:56:00.003-07:002014-06-08T06:56:57.495-07:00வளர்ப்பு மகனுக்கு சொத்துரிமை இல்லாததேன்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_iPaosU7kxmbYruW3Xwmo13GGkY2AnVLJ09-5zU187HH4ZtO9aNEPLzIvgj94c52ELXkgDH1Hkz2QohNwr82zHppFkempXgiaRTvwjzhj8vn0Ax_OJ3OlaAGjoIDzrS55RIpm0JaxNsU/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_iPaosU7kxmbYruW3Xwmo13GGkY2AnVLJ09-5zU187HH4ZtO9aNEPLzIvgj94c52ELXkgDH1Hkz2QohNwr82zHppFkempXgiaRTvwjzhj8vn0Ax_OJ3OlaAGjoIDzrS55RIpm0JaxNsU/s1600/image.jpg" height="219" width="320" /></a></div>
அல்லாஹ்வின் திருபெயரால் ...............<br />
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!<br />
<br />
வளர்ப்பு மகனுக்கு சொத்துரிமை இல்லாததேன்?<br />
<br />
இஸ்லாத்தில் வளர்ப்பு மகனுக்கு சொத்துரிமை இல்லை என்று கூறப்படுகிறதே அது ஏன் என்று சிலர் குழப்பமடைகின்றனர் . இவர்கள் இஸ்லாத்தில் வாரிசுரிமை சட்டம் எந்த அடிப்படையை கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்வார்களானால் குழப்பம் தீர்ந்து விடும்.<br />
<a name='more'></a><br />
<br />
வாரிசுரிமை சட்டம் என்பது இரத்த சம்பந்தத்தையும், நெருக்கமான உறவையும் அடிப்படையாக கொண்டதாகும் என்பதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். அடுத்து இஸ்லாத்தில் வளர்ப்பு மகனுக்கு வளர்ப்பவர்களுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
வளர்ப்பு மகனை தமது பிள்ளைகளோடு ஒருவராகவே வைத்திருக்கலாம் அவரின் மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்தும் வளர்த்திருக்கலாம் அந்த மகனும் அவர்களை சொந்த பெற்றோர்களாக மதித்திருக்கலாம் இவைகளெல்லாம் அவர்களின் மனோ நிலையையும் பழக்க வழக்கத்தையும் , நாட்டு நடப்பையும் சார்ந்த விஷயங்கள் என்று தான் கூற முடியும் தவிர சட்டப்படி இரத்த சம்பந்தம் உடையவர் என்றோ , நெருக்கமான உறவினர் என்றோ கூற முடியாது அதே போன்று வளர்த்தவர்களை பராமரிக்கும் பொறுப்போ, கடமையோ சட்டப்படி வளர்ப்பு மகனின் மீது கிடையாது ஆனால் அவர்களை பெற்றோர்கலாகவே மதிப்பதும், பராமரிப்பதும் நடைமுறையின் அடிப்படையில் அவர்களின் மீது கடமையாகும்.<br />
<br />
எனவே, தொடர்புகளை மையமாக வைத்தே வளர்ப்பு மகனுக்கு சட்டப்படி சொத்துரிமை இல்லை என இஸ்லாம் கூறுகிறது. ஆனால், வளர்த்தவர்கள் அவர்களின் ஜீவிய காலத்திலேயே வளர்ப்பு மகனுக்கு அவர்கள் எதையும் கொடுக்கலாம் அதற்கு எந்த தடையுமில்லை.<br />
<br />
பாட்டன் சொத்து பேரனுக்கு சொந்தமா?<br />
<br />
பாட்டன் சொத்து பேரனுக்கு சொந்தம் என்று ஒரு சொல் பொதுவாக மக்களிடையே பேசப்படுகிறது, அந்த சொல் எங்கிருந்து எப்படி நம்மிடம் வந்தது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இஸ்லாமிய சட்டப்படி அப்படி ஒன்றும் கிடையாது. அப்படி சொல்வது தவறாகும் அது பிறமத சட்டமாகும்.<br />
<br />
ஒருவர் மரணமாகிவிட்டால் அவருடைய சொத்து அவருடைய மகனுக்கு தான் சொந்தமாகும். அவர் அதை தன் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். யாருக்கும் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.<br />
<br />
எனவே, அவருடைய பிள்ளைகள் வாப்பா! இது எங்கள் பாட்டன் சொத்து இது எங்களுக்கு வந்து சேர வேண்டிய சொத்தாகும்,, அதை நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு செலவு செய்யவோ , யாருக்கும் கொடுக்கவோ கூடாது என்று தடை செய்யவோ அல்லது எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று கேட்கவோ முடியாது.<br />
<br />
அவர் அதை ஆண்டு அனுபவித்து எதை விட்டுச் செல்கின்றாரோ அதுதான் அவருடைய பிள்ளைகளுக்கு [அந்த பேரபிள்ளைகளுக்கு] வந்து சேரும் அவ்வளவுதான், இதில் இது பாட்டனாருடைய சொத்து இது வாப்பா சுயமாக சம்பாதித்த சொத்து என்றெல்லாம் பாகுபாடு கிடையாது.<br />
<br />
அல்லாஹ் மிக அறிந்தவன்<br />
<br /></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/03681383666404797056noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5544343987024143610.post-15703240144261950892014-06-03T08:29:00.001-07:002014-06-03T08:29:10.533-07:00தந்தைக்குமுன் இறந்து விட்ட மகனின் பிள்ளைகளுக்கு சொத்துரிமை இல்லாததேன்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_iPaosU7kxmbYruW3Xwmo13GGkY2AnVLJ09-5zU187HH4ZtO9aNEPLzIvgj94c52ELXkgDH1Hkz2QohNwr82zHppFkempXgiaRTvwjzhj8vn0Ax_OJ3OlaAGjoIDzrS55RIpm0JaxNsU/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_iPaosU7kxmbYruW3Xwmo13GGkY2AnVLJ09-5zU187HH4ZtO9aNEPLzIvgj94c52ELXkgDH1Hkz2QohNwr82zHppFkempXgiaRTvwjzhj8vn0Ax_OJ3OlaAGjoIDzrS55RIpm0JaxNsU/s1600/image.jpg" height="219" width="320" /></a></div>
அல்லாஹ்வின் திருபெயரால் .........<br />
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!<br />
<br />
இஸ்லாத்தில் ஒரு அழகான வழிமுறைகள் இருக்க , சில முஸ்லிம்கள் மாற்று வழிகளை தேடுவது, அணுகுவது வேதனைக் குரிய விடயம்தான்!<br />
<br />
<br />
ஒரு தந்தைக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர் அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் அந்த நான்கு பிள்ளைகளில் ஒருவர் தந்தைக்குமுன் இறந்து விடுகிறார் என்றால் அவருடைய பிள்ளைகளுக்கு அந்த பாட்டனார் சொத்தில் பங்கில்லை என்பது ஷரீ அத்தின் சட்டமாகும்.இதில் தந்தையின் காலத்துக்கு பின்னுள்ள அந்த மூன்று மகன்களுக்கோ அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கோ சொத்துரிமை இருக்கும் போது தந்தைக்கு முன் இறந்து விட்டவரின் பிள்ளைகளுக்கு மட்டும் பாட்டனார் சொத்தில் உரிமை இல்லை என்று கூறுவது அறிவுக்கு பொருத்தமானதாகத் தெரியவில்லையே என்றுதான் எண்ணத்தோன்றும் ஆனால், அச்சட்டத்தின் அடிப்படை தத்துவத்தை நன்கு சிந்தித்தால் அதிலுள்ள உண்மை புரியும்.<br />
<a name='more'></a><br />
<br />
இதனை ஆராயப் புகுமுன் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு எத்தகையது பாட்டனுக்கும் பேரனுக்கும் உள்ள உறவு எத்தகையது என்பதை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும்.<br />
<br />
தந்தைக்கு நேரடியான வாரிசாக வரக்கூடியவர் மகனாகும், பாட்டனுக்கு பேரன் நேரடி வாரிசாக வர முடியாது. எனவே ஒருவர் காலமாகிவிட்டால் அவருடைய சொத்து அவரின் மகனுக்கு சொந்தமாகி விடுகிறது . அந்த மகனும் காலமாகி விட்டப்பிறகு தான் பேரனுக்கு போய் சேருகிறது. வாரிசுரிமை சட்டம் இந்த முறையில் இருப்பதால், தந்தைக்குப்பின் இறந்த மகனின் பிள்ளைகளுக்கு சட்டப்படி வாரிசுரிமை வந்துவிடுகிறது.<br />
<br />
தந்தைக்கு முன் ஒரு மகன் இறந்து விட்டால் , அவருடைய வாரிசுரிமையும் அப்போதே அறுந்து விடுகிறது. எனவே அவருடைய பிள்ளைகளுக்கு [அந்த பாட்டன் சொத்தில்] சட்டப்படி வாரிசுரிமை இல்லையென ஷரீ அத் கூறுகிறது.<br />
<br />
இருப்பினும் , அந்தப்பிள்ளைகளுக்கு சட்டப்படி வாரிசுரிமை இல்லாவிட்டாலும் அவர்களுக்கு சொத்து கிடைப்பதற்கு வேறு சில வழிமுறைகளை இஸ்லாம் காட்டித்தந்துள்ளது.<br />
<br />
''உங்கள் ஒருவருக்கு மரணம் நெருங்கினால், அவர் பொருளை விட்டுச் செல்பவராக இருப்பின் [தம்] பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் நீதத்துடன் வசியத்து [மரணசாசனம்] செய்தல் உங்களின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது, [இது பய பக்தியுள்ளவர்களின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது'' என்று கூறுகிறது. [குர் ஆன் .. 2-180]<br />
<br />
இந்த வசனம் , ஒருவருக்கு மரண அறிகுறி தென்படும்போது, அவர் [விரும்புகின்ற] உறவினருக்கு ஓரளவு சொஹ்து கொடுக்கச் சொல்லி வசிய்யத் செய்ய அனுமதி உண்டு என்ற கருத்தை தெரிவிக்கிறது.<br />
<br />
இது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் கடமையாக இருந்து, பிறகு நபியவர்களின் ஹதீஸ் மற்றும் இஜ்மாவின் பிரகாரம் கடமை என்பது தளர்த்தப்பட்டு வசியத்திற்கு அனுமதிஉண்டு என்று சட்டம் வகுக்கப்பட்டது [இதன் அடிப்படையில் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள கடமை என்ற சட்டம் மாற்றப்பட்டதாக ஃ பிக்ஹூ நூல்கள் கூறுகின்றன]<br />
<br />
இந்த சொல்லின்படி அந்த பேரப்பிள்ளைகளுக்கு வசியத்தின் மூலம் சொத்து கிடைக்கச் செய்யலாம், அதுவும் மரணத்தருவாயில்தான் இவ்வாறு செய்ய வேண்டுமென்பதல்ல, அவர் நல்ல நிலையில் இருக்கும்போதே நிலைமையை உணர்ந்து அந்த பேரப்பிள்ளைகளுக்கு ஓரளவு சொத்துக்களில் பங்குத்தரவோ, எழுதிவைக்கவோ செய்யல்லாம் இதற்கும் இஸ்லாம் அனுமதிக்கிறது.<br />
<br />
மேலும் ஒருகால் பாட்டனார் எதுவுமே செய்யாமல் மரணமாகிவிட்டாலும், பாகஸ்த்தரர்கள் பாகம் பிரிகின்றபோது, வாரிசுதார்களின் அனுமதியோடு அந்தப்பிள்ளைகளுக்கு சிறிதளவு சொத்து கொடுப்பது நல்லது என குர் ஆன் கூறுகிறது. எனவே தந்தைக்கு முன் இறந்து விட்டவரின் பிள்ளைகளுக்கு சட்டப்படி இல்லாவிட்டாலும் குர் ஆனில் நலுபதேசத்தின் படி சொத்துக்கள் கொடுப்பது சம்மந்தப்பட்டவர்களுக்கு சிறந்ததும் நல்லதுமாகும்.<br />
இன்ஷாஅல்லாஹ் தொடரும்..........<br />
<br />
அல்லாஹ் மிக அறிந்தவன் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/03681383666404797056noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5544343987024143610.post-15302998693652983982014-05-31T07:50:00.001-07:002014-05-31T07:50:32.829-07:00மணமான பெண்களின் பாகம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_iPaosU7kxmbYruW3Xwmo13GGkY2AnVLJ09-5zU187HH4ZtO9aNEPLzIvgj94c52ELXkgDH1Hkz2QohNwr82zHppFkempXgiaRTvwjzhj8vn0Ax_OJ3OlaAGjoIDzrS55RIpm0JaxNsU/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_iPaosU7kxmbYruW3Xwmo13GGkY2AnVLJ09-5zU187HH4ZtO9aNEPLzIvgj94c52ELXkgDH1Hkz2QohNwr82zHppFkempXgiaRTvwjzhj8vn0Ax_OJ3OlaAGjoIDzrS55RIpm0JaxNsU/s1600/image.jpg" height="219" width="320" /></a></div>
அல்லாஹ்வின் திருபெயரால்...<br />
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!<br />
<br />
<br />
இஸ்லாமின் வாரிசுரிமை சட்டங்கள் தொடர்ச்சி..........<br />
<br />
மணமான பெண்களின் பாகம் ..<br />
<br />
பாகப்பிரிவினையின் போது , மணம்முடித்து கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நிறைய நகைகள் போடப்பட்டு விட்டது நிறைய செலவுகளும் செய்யப்பட்டு விட்டன , எனவே, அந்தப் பெண்களுக்கு எதோ ஓரளவு பணம் கொடுத்தால் போதும் என்ற எண்ணத்தின் தோராயமாக ஒரு தொகையை கொடுத்து விட்டு இது உன் பாகத்துக்கு சரியாகி விட்டது என்று கரி சிலர் கணக்கை முடித்துக் கொள்கிறார்கள் இதுவும் தவறாகும்.<br />
<a name='more'></a><br />
<br />
திருமணத்தின்போது போடப்பட்ட நகைகளும் செய்த செலவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது, அது முடிந்து போன விஷயம், எனவே இப்போது சட்டப்படி என்ன பாகம் வருகிறதோ அதைத்தான் அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டும்.<br />
<br />
இன்னும் சிலர், இஸ்லாமிய சட்டம் என்ன கூறுகிறது என்பதையெல்லாம் பார்ப்பது கிடையாது. சட்டப்படி ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய பாகம் 1-1/2 லட்சமாக இருந்தால் ஒரு லட்சத்தை கொடுத்து இது நம்முடைய வாப்பாவின் சொத்திலிருந்து உனக்கு சேர வேண்டிய பாகம் என்று சொல்லி கணக்கை முடித்துக்கொள்கிறார்கள் இதுவும் தவறாகும்.<br />
<br />
எனவே, இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டுமானால், ஒவ்வொருவரும் ஓரளவாவது வாரிசு உரிமை என்றால் என்ன? அதில் நிறைந்திருக்கும் நுட்பமான விஷயங்கள் என்ன என்பது பற்றி தெரிந்துகொள்வது மிக மிக அவசியமாகும்.<br />
<br />
வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு பாதகமா?<br />
<br />
இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் ஆணுக்கு இரண்டு பங்கு, பெண்ணுக்கு ஒரு பங்கு என்று சட்டம் கூறுகிறது. சிலர் இதை வைத்து இஸ்லாத்தில் பெண்களுக்கு சரியான முறையில் சொத்துரிமை வழங்கப்படவில்லை என்று கருதுகின்றனர்.<br />
<br />
இவர்களின் இந்த என்னத்துக்கு காரணம் பெண்களுக்கு ஒரு பங்கு என்று ஏன் இஸ்லாம் கூறுகிறது என்பதை சிந்த்திக்காததும் அவர்களுக்கு இந்த ஒரு வழியைத்தவிர வேறு எந்தெந்த வழிகளில் வாரிசுரிமை வருகிறது எந்தெந்த விகிதாச்சாரத்தில் சொத்துக்கள் கிடைக்கின்றன என்பதையெல்லாம் புரிந்து கொள்ளாததுமே காரணமாகும்,, புரிந்து கொள்வார்களானால் அந்த எண்ணம் தவறு என்பதை அறிந்து கொள்வார்கள்.<br />
<br />
ஆண்களுக்கு இரண்டு பங்கு, பெண்களுக்கு ஒரு பங்கு என்பது, பெண்கள் தம்முடைய சகோதரர்களுடன் இருக்கும்போது மட்டுமே உள்ள நிலையாகும், இது மட்டுமே ஒரு பெண்ணுக்குரிய வாரிசுரிமை என்று எண்ணிவிடாதீர்கள், ஒரு பெண் தன்னுடைய பெற்றோர், பிள்ளைகள், கணவன் சில நேரங்களில் சகோதரன்,சகோதரி, பாட்டன், பாட்டி ஆகிய அனைவருக்கும் வாரிசாக வரக்கூடியவளாகும் .<br />
<br />
மேலும் ஒரு பெண்ணுக்கு அவளுடன் இருக்கும் வாரிசுதாரர்களைப் பொறுத்து 3/4, 1/2, 1/4, 6ல் ஒன்று, 8ல் ஒன்று என்று பல விகிதாச்சாரங்களில் பாகங்கள் கிடைக்கின்றன. அவைகளின் விரிவான விளக்கங்கள் வாரிசுதார்ரர்களும் பாகங்களும் என்ற தலைப்பில் கூறப்படும். இப்போது ஆணுக்கு இரண்டு பெண்ணுக்கு ஒன்று என்பதற்குரிய காரணத்தை பார்ப்போம்.<br />
<br />
பொதுவாக பெண் என்பவள் திருமணம் ஆகும்வரை பெற்றோர்களின் பொறுப்பில் வாழக்கூடியவளாகும் . திருமணத்திற்குப் பிறகு அவளுக்கு எல்லாமே கணவன்தான். கணவன் வீடுதான் அவளுடைய வீடு. அவளுடைய செயல்பாடுகள் அனைத்தும் கணவனை சார்ந்தவையாகவே மாறிவிடுகின்றன. இதுதான் பெண்களின் நிலை.<br />
<br />
ஆண்பிள்ளைகளின் நிலை அதற்கு நேர் மாற்றமானதாகும். அவர்கள் வீட்டோடு இருந்து வீட்டையும் வீடு சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும். மேலும் தந்தையின் தொழில், வியாபாரம், கொடுக்கல், வாங்கல் போன்ற அணைத்து காரியங்களிலும் தந்தைக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய பொறுப்பும் ஆண்பிள்ளைகளையே சார்ந்ததாகும்.<br />
<br />
அதுமட்டுமல்ல பெற்றோர்களை அவர்களின் கடைசி காலம் வரை பாதுகாக்கும் பொறுப்பும், அவர்களுக்கு வேண்டிய அனைத்து காரியங்களையும் செய்து தரவேண்டிய கடமையும், தேவைப்படும்போது நிர்பந்த சூழலில் சகோதரிகளை பராமரிக்கின்ற பொறுப்பும் ஆண்பிள்ளைகளையே சார்ந்ததாக இருக்கிறது.<br />
<br />
இத்தகைய பொறுப்புகளை எல்லாம் ஆண்களின் மீதே சுமத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கு இரண்டு பங்கு என்றும் இத்தகைய பொறுப்புக்கள் பெண்களின் மீது சுமத்தப்படவில்லை என்பதால் அவர்களுக்கு ஒரு பங்கு என்றும் ஷரீ அத் சட்டம் கூறுகிறது. இதுவரை கூறப்பட்ட விஷயங்களை நன்கு சிந்தித்து பாருங்கள் அந்த சட்டத்தின் தத்துவம் நன்கு தெளிவாகப் புரியும்.<br />
அல்லாஹ் மிக அறிந்தவன்<br />
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்.......................................... </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/03681383666404797056noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5544343987024143610.post-53949571931933175132014-05-29T03:15:00.001-07:002014-05-29T03:15:02.137-07:00ஆவணங்களை பதிந்து விடுங்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_iPaosU7kxmbYruW3Xwmo13GGkY2AnVLJ09-5zU187HH4ZtO9aNEPLzIvgj94c52ELXkgDH1Hkz2QohNwr82zHppFkempXgiaRTvwjzhj8vn0Ax_OJ3OlaAGjoIDzrS55RIpm0JaxNsU/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_iPaosU7kxmbYruW3Xwmo13GGkY2AnVLJ09-5zU187HH4ZtO9aNEPLzIvgj94c52ELXkgDH1Hkz2QohNwr82zHppFkempXgiaRTvwjzhj8vn0Ax_OJ3OlaAGjoIDzrS55RIpm0JaxNsU/s1600/image.jpg" height="219" width="320" /></a></div>
அல்லாஹ்வின் திருபெயரால் ......<br />
<div>
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!</div>
<div>
<br /></div>
<div>
சொத்து என்றால் நமக்கு ஞாபகத்துக்கு வருவது , பிரச்சனை தான் '' கோர்ட்டு , வக்கீல் என்று காலத்தையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டுதான் சிலர் இருக்கிறார்கள். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் நபி [ஸல்] அவர்கள் சொல்லி தந்த வழிமுறைகளில் போனால் அது வெற்றிதான்! மாறாக பல சிக்கல்களும் , சோதனைகளும் , மன உளைச்சல்களும் தான் வரும் என்பதை நாம் உணர வேண்டும். இது என் சொந்த கருத்து!</div>
<div>
<br /></div>
<div>
''முஃமின்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால் அதனை எழுதி [பதிந்து] கொள்ளுங்கள், உங்களுக்கு மத்தியில் [கடன்] விபரத்தை எழுதுகிறவர் நீதியுடன் எழுதட்டும் ,........... மேலும் உங்களுடைய ஆண்களிலிருந்து நீதியுள்ள சாட்சியாளர்கள் இருவரை நீங்கள் சாட்சிகளாக ஆக்கிக்கொள்ளுங்கள்..... மேலும், [கடன் தொகை] கொஞ்சமாக இருந்தாலும் அதனுடைய தவணை வரை [யாரையுடன்] அதை எழுதி கொள்வதற்கு சடையாதீர்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.</div>
<div>
[அல்குர் ஆன் ..2..282]</div>
<div>
<br /></div>
<div>
இந்த வசனம் கடன் கொடுக்கல் வாங்கல் பற்றியதாக இருந்தாலும் , குறுகிய காலத்துக்கே எழுத்து மூலமாக பதியவேண்டும் என்று கூறும்போது, காலா காலத்துக்கும் தீர்வாக உள்ள பாகபிரிவினைக்கு சொல்லவே தேவையில்லை கண்டிப்பாக எழுத்து மூலமாகத்தான் எழுதப்பட வேண்டும் என்ற முக்கியமான கருத்த நமக்கு மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. </div>
<div>
<br /></div>
<div>
அசையாப் பொருள் யாருக்கு ?<br />
<a name='more'></a><br />
<br />
ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாரிசுதாரர்களாக இருக்கும் குடும்பத்தில் பாகபிரிவினை செய்கின்றபோது அசையாப் பொருட்கள் ஆண்களுக்குதான் சேரவேண்டும் என்ற கருத்து பொதுவாக மக்களிடையே இருந்து வருகிறது, அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.<br />
<br />
பெண் என்பவள் மணம் முடித்து கொடுக்கப்பட்டு கணவன் வீட்டுக்கு போய்விடக்கூடியவள் . இனி எல்லாமே அவளுக்கு கணவன் வீடுதான், ஆண்பிள்ளைகள் வீட்டோடு இருந்து வீட்டையும், பெற்றோர்களையும் பாதுகாத்து பராமரித்து வந்தவர்கள், இனியும் பாதுகாப்பவர்கள்.<br />
<br />
எனவே, பாகபிரிவினை என்று வரும்போது அசையாப் பொருட்கள் அதாவது வீடு , மனை , நிலம் மற்றும் கட்டிடங்கள் போன்ற சொத்துக்கள் ஆண்பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்,, பெண் பிள்ளைகளுக்கு உரிய பாகத்துக்கு, அதற்குரிய பணத்தை கொடுத்து விடவேண்டும் என்று பொதுவாக கருதப்படுகிறது. ஆனால், இதுதான் சட்டம் என்று எண்ணுவது தவறாகும்.<br />
<br />
இஸ்லாமிய சட்டம் என்னவெனில் இறந்துவிட்டவரின் வீடு, நிலம், மனை , ரொக்கப்பணம் என்று இருக்கும் முழு சொத்தையும் கணக்கீட்டு அந்த தொகையை வாரிசுதாரர்கள் விகிதாச்சாரப்படி நிலமாகவோ வீடாகவோ, பணமாகவோ பாகம் பிரித்து கொள்ள வேண்டும். இதுதான் சட்டம். இதில் ஆண்களுக்கு அசையா பொருளும், பெண்களுக்கு பணமாகவும் தான் கொடுக்க வேண்டும் என்ற எந்த விதிமுறையும் கிடையாது.<br />
<br />
எனவே, சமந்தப்பட்டவர்கள் கூடிப்பேசி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஆண் , பெண் என்ற பேதமின்றி யாருக்கு எதை கொடுக்கலாம் என்பதை தீர்மானித்து அதன்படி பிரித்துக்கொள்ள வேண்டும், பெண்களுக்கு வீடோ நிலமோ தரமுடியாது என்று யாரும் கூறமுடியாது.<br />
<br />
சொத்துக்கு விலை நிர்ணயம்<br />
<br />
மேலும் வீடு , நிலம் போன்ற அசையா பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும்போது நடைமுறையில் உள்ள விலையைதான் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசாங்கம் நிர்ணயிக்கும் விலையை வைத்து பாகம் பிரிக்கக்கூடாது . அப்படி லாபமும் சிலருக்கு பாதிப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அது எப்படி என்பதை பார்ப்போம் .<br />
<br />
ஒரு வீடு இருக்கிறது , அதன் நடைமுறை விலை 30 லட்சம் கவர்மெண்டு நிர்ணயக்கும் விலை 20 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டுக்கு , பாகஸ்த்தர்கள் நான்கு பேர் இருக்கிறார்கள். இப்போது அரசாங்க விலைப்படி பாகம் பிரித்தால் ஆளுக்கு 5 லட்சம் வரும். இந்த நிலையில் ஒருவர் அந்த வீட்டை எடுத்துக்கொண்டு மற்ற மூவருக்கும் தலா ஐந்து லட்சம் வீதம் 15 லட்சம் கொடுத்து விடுகிறார். இப்போது அந்த வீட்டை எடுத்துக்கொண்டவருக்கு நடைமுறை விலைப்படி பார்த்தால் ரூபாய் 10 லட்சம் அதிகப்படியாக கிடைத்து விடுகிறது இதனால் அந்த மூவரும் பாதிக்கப்பட்டு விடுகிறார்கள் .<br />
<br />
நடைமுறை விலைப்படி பிரிக்கப்பட்டிருந்தால் நபர் ஒன்று 7-1/2 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. எனவே நான் மேல் குறிப்பிட்டிருக்கும் நுட்பமான விஷயங்களை நன்கு சிந்தித்து விலை மதிப்பீடு விஷயத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.<br />
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்...........<br />
<br />
அல்லாஹ் மிக அறிந்தவன்.</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/03681383666404797056noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5544343987024143610.post-81830614778122328492014-05-24T07:52:00.000-07:002014-05-29T02:25:18.295-07:00மனைவி , மக்களும் விரோதிகளா ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrHTB8RcuoGvEPguuUbfISVowlGrFInxeOOVJzwWQLIgsoh9CbUUKQPd5RgTcotvVyQhefmvV3QOsxAR2CI7gcQKy961NJWGJNqkuZ0in0blWwJSSu3-eb2mt8a_I1THI-o3EoYbIgte8/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrHTB8RcuoGvEPguuUbfISVowlGrFInxeOOVJzwWQLIgsoh9CbUUKQPd5RgTcotvVyQhefmvV3QOsxAR2CI7gcQKy961NJWGJNqkuZ0in0blWwJSSu3-eb2mt8a_I1THI-o3EoYbIgte8/s1600/image.jpg" height="219" width="320" /></a></div>
அல்லாஹ்வின் திருபெயரால் ...<br />
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !<br />
<br />
மேலும் மனிதர்களின் நிலைமைகளைப்பற்றி அல்லாஹ் தனது திருமறையில் ''ஈமான் கொண்ட விசுவாசிகளே! நிச்சயமாக உங்கள் மனைவிகளிலும் , உங்களுடைய பிள்ளைகளிலும் உங்களுக்கு விரோதிகளும் இருக்கின்றார்கள், ஆகவே , அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்'' என்றும் மற்றொரு வசனத்தில் ''உங்களுடைய செல்வங்களும் உங்களுடைய பிள்ளைகளும் [உங்களை] குழப்பத்தில் ஆழ்த்தக்கூடியவைகலாகும் '' என்றும் அல்லாஹ் கூறுகிறான்.<br />
<a name='more'></a><br />
<br />
நபி [ஸல்] அவர்கள் ''நிச்சயமாக ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு குழப்பம் [தரும் காரியம்] இருக்கிறது , என்னுடைய சமூகத்தினருக்கு குழப்பம் [தரும் காரியம்] செல்வமாகும் என்றும் . [திர்மிதி]<br />
<br />
மற்றொரு ஹதீஸில் , என்னுடைய காலத்துக்குப்பின் பெண்களால் ஏற்படும் சோதனைதான் ஆண்களுக்கு இடையூறுகளை [இன்னல்களை] தரக்கூடியதாக இருக்கும் என்றும் '' கூறியுள்ளார்கள். [புகாரீ]<br />
<br />
மேல்கூறப்பட்ட இறை வசனங்களும் ஹதீஸ்களும் , பொன்னும் பொருளும் பெண்ணும் மனிதர்களை எந்த நிலைமைக்கு ஆளாக்கிவிடுகின்றன, எனென்ன பாடுபடுத்துகின்றன என்பதை மிகத்தெளிவாக விளக்கி காட்டுகின்றன.<br />
<br />
ஆம்! என்னதான் அன்பும் பாசமும் பொழிகின்ற உறவாக இருந்தாலும் சொத்துப் பிரச்சனை பாகபிரிவின்னை, கொடுக்கல் வாங்கல் மற்றும் பல காரணங்களால் மனஸ்தாபங்கள் ஏற்படவே செய்யும், அது அவர்களின் மனங்களில் விரோதமாகவும் குரோதமாகவும் வளரத் தொடங்கி நேரம் வரும்போது எரிமலையாக வெடித்துச் சிதறுவதை பார்க்கத்தானே செய்கிறோம்.<br />
<br />
எனவே, பாகபிரிவினையின் போது அண்ணன் தம்பிதானே , அக்காள் தங்கைதானே, தந்தை மகன் தானே , கணவன் மனைவி தானே என்று ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவதும் கூடக்குறைய பாகங்களை பகிர்ந்து கொள்வதும் வரவேற்கக் வேண்டிய விஷயம்தான் அதில் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை .<br />
<br />
ஆனால், பிற்காலத்திலோ , அல்லது அடுத்து தலைமுறையிலோ அப்பா அம்மா பாகம் என்று பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் பாகபிரிவினை விபரங்கள் அனைத்தையும் எழுத்து மூலமாக பதிந்து விடவேண்டும் . அதனைப் பற்றியும் அல்லாஹ் நமக்கு கற்றுத் தந்திருக்கிறான்.<br />
<br />
ஆவணங்களை பதிந்து விடுங்கள்<br />
<br />
''முஃமின்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால் அதனை எழுதி [பதிந்து] கொள்ளுங்கள், உங்களுக்கு மத்தியில் [கடன்] விபரத்தை எழுதுகிறவர் நீதியுடன் எழுதட்டும், ......... மேலும் உங்களுடைய ஆண்களிலிருந்து நீதியுள்ள சாட்சியாளர்கள் இருவரை நீங்கள் சாட்சிகளாக ஆக்கிக்கொள்ளுங்கள்....மேலும், [கடன் தொகை] கொஞ்சமாக இருந்தாலும் அதனுடைய தவணை வரை [யாருடன்] அதை எழுதி கொள்வதற்கு சடையாதீர்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.<br />
அல்குர் ஆன் 2.282]<br />
<br />
இந்த வசனம் கடன் கொடுக்கல் வாங்கல் பற்றியதாக இருந்தாலும் , குறுகிய காலத்துக்கே எழுத்து மூலமாக பதிய வேண்டும் என்று கூறும்போது, காலா காலத்துக்கும் தீர்வாக உள்ள பாகபிரிவினைக்கு சொல்லவே தேவையில்லை கண்டிப்பாக எழுத்து மூலமாகத்தான் எழுதப்பட வேண்டும் என்ற முக்கியமான கருத்தை நமக்கு மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.<br />
<br />
எனவே , மேல் கூறப்பட்டுள்ள மிக நுட்பமான விஷயங்களை நன்கு சிந்தித்து , உடன் பிறந்தவர்கள் தானே , உறவினர்கள் தானே, நம்பிக்கைக்குரியவர்கள் தானே , என்றெல்லாம் பார்க்ககூடாது. யாராயிருந்தாலும் சரி கொடுக்கல் வாங்கல், பாகபிரிவினை மற்றும் முன் பணமாக தரக்கூடிய காரியங்கள் போன்ற அனைத்தையும் சிரமத்தை பாராமல் எழுத்து மூலமாக பதிந்து விடவேண்டும் , அதற்கு தக்க சாட்சிகளையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் .<br />
<br />
அவ்வாறு பதிந்துவிடுவது தற்போதைக்கு மட்டுமல்ல , காலா காலத்துக்கும் பிற்காலத்தில் வரக்கூடிய சந்ததிகளுக்கிடையில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் தடுபதற்க்கும் சரியான வழியாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அத்தகைய செயல் திறனையும் நற்பண்பையும் அறிவாற்றலையும் தந்தருள்வானாக !<br />
<br />
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும் ..........<br />
அல்லாஹ் மிக அறிந்தவன்.<br />
<br /></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/03681383666404797056noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5544343987024143610.post-80643141805679527702014-05-24T00:43:00.000-07:002014-05-24T00:43:01.259-07:00எழுதப்படாத பாகப்பிரிவினையின் விபரீதங்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgai37zwl9egER53mF-JBsPyJLnPj42ME0BNnCgtkEwDrzpCHSZkuPxYZpYgZF9nNobPY7CN6FDR7ZPMVivIO0ZB4AMeS_IjJG0UvNwFqoFYT1vnnPJ6arSDmvtKktLvqRCPIGcYebkQXc/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgai37zwl9egER53mF-JBsPyJLnPj42ME0BNnCgtkEwDrzpCHSZkuPxYZpYgZF9nNobPY7CN6FDR7ZPMVivIO0ZB4AMeS_IjJG0UvNwFqoFYT1vnnPJ6arSDmvtKktLvqRCPIGcYebkQXc/s1600/image.jpg" height="219" width="320" /></a></div>
அல்லாஹ்வின் திருபெயரால் ...<br />
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!<br />
<br />
சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யும் போது யார் யாருக்கு எந்தெந்த சொத்துக்கள் கொடுக்கப்பட்டன, யார் யாருக்கு ரொக்கமாக பணம் கொடுத்து பைசல் செய்யப்பட்டன என்ற விபரங்களை எல்லாம் தெளிவாக எழுத்து மூலமாக ரிஜிஸ்டர் ஆபீசில் பதிந்து விட வேண்டும். அவாறு செய்யாவிட்டால் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் அப்போதைக்குத் தெரியாது, பிற்காலத்தில் சிலருக்கு சாதகமும் சிலருக்கு பாதகமும் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதன் விபரத்தை இப்போது பார்ப்போம்.<br />
<a name='more'></a><br />
<br />
ஒரு வீடோ நிலமோ பொது சொத்தாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் . அதற்கு ஆண் , பெண் என்று பல பாகஸ்தர்கள் இருப்பார்கள். அவர்களில் சிலர் ஊரோடும் சிலர் வெளிநாடுகளிலும் இருக்கலாம் இந்த நிலையில் ஒருவர் எல்லா பாகஸ்த்தர்களுக்கும் ரொக்கமாக பணத்தை கொடுத்து விட்டு ஊரிலிருக்கும் ஓரிருவரை வைத்து முழு சொத்தையும் தன் பேரில் ரிஜிஸ்டர் செய்து கொள்கிறார் இது ஒரு வகை.<br />
<br />
இன்னொன்று ஒருவர் சொத்துக்களை தானே எடுத்துக்கொண்டு பாகஸ்த்தர்களிடம் விடுதலை பத்திரம் [அதாவது அந்த சொத்தில் தமக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று பத்திரம்] எழுதி வாங்கும்போது அருகில் இருப்பர்வர்களிடம் மட்டும் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் எழுதிவாங்காமல் விட்டு விடுகிறார். ஆனால் அனைவருக்கும் பாகத்துக்குரிய பணத்தை கொடுத்து விடுகிறார் இதுஒரு வகை.<br />
<br />
மேல் கூறப்பட்ட இரண்டு முறைகளிலும் பாகஸ்த்தர் அனைவர்களுக்கும் அவர்களுக்கு சேரவேண்டிய பாகங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன என்று ஊரறிந்த உண்மையாகும். ஆனால் கால ஓட்டத்தில் மனஸ்த்தாபங் கள் ஏற்படுகின்றபோது விடுதலைப் பத்திரம் எழுதித் தராதவர்களும் ரிஜிஸ்ட்டரில் கையெழுத்து போடாதவர்களும் மனசாட்சியை மறந்து பழிவாங்கும் நோக்கத்திலோ அல்லது பொருளாசையின் காரணத்தாலோ மீண்டும் பாகம் கேட்டு பிரச்சனை பண்ணலாம்.<br />
<br />
அதுமட்டுமல்ல, அப்படியே அவர்களுடைய காலம் பிரச்சனை இன்றி கடந்து விட்டாலும் அவர்களுடைய பிள்ளைகளின் காலத்திலும் அதே பிரச்சனை உருவாகலாம். அப்போது அந்த பிள்ளைகள் ரிகார்டுகள் எதுவும் எழுதி தரப்படவில்லை என்ற அதே காரணத்தை முன் வைத்து கிடைத்த வரை லாபம் தானே என்ற பேராசையில் மனசாட்சியை மூட்டைகட்டி வைத்துவிட்டு சம்மந்தப்பட்டவரிடம் மீண்டும் தம் பெற்றோரின் பாகம் எங்கே என்று கேட்டு தொல்லை தரலாம்.<br />
<br />
இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று கேட்டுவிடாதீர்கள் [இறையச்சம் உள்ள சாலிஹான மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களைப் பற்றி இங்கு பேச்சில்லை] பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பதுபோல் பணத்துக்காக எதையும் செய்யும் பாவிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்.<br />
<br />
இத்தகைய வம்பர்கள் கோர்ட்டுக்குப் போனாலும் வெற்றி அவர்களுக்கு தான் கிடைக்கும் அப்போதுதான் சம்மந்தப்பட்டவருக்கு, அன்றே தாம் எல்லோரிடமும் விடுதளைப்பத்திரமோ வேறு அதற்குரிய அத்தாட்சி ரிகார்டோ எழுதிவாங்காமல் போனது எவ்வளவு பெரிய தவறு என்பதும் நம்பி மோசம் போய்விட்ட விஷயமும் புரியும் இப்போது புரிந்தோ வருந்தியோ என்ன பிரயோஜனம்.<br />
இன்ஷாஅல்லாஹ் தொடரும் ....................<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI5wEI0y4q8TbU9CwzrII4z4xbhG3LqOj6eOPApxdYStjdX_37TPXZe6Ax_wtLtpEVYIOYhoPE8Z1DIqeMXZdbOCJ90Ls4Z6cSQuZvV07DsDzuqKpNf9EXSKsQuRYuoWv5ZFhp4bscOx8/s1600/image.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI5wEI0y4q8TbU9CwzrII4z4xbhG3LqOj6eOPApxdYStjdX_37TPXZe6Ax_wtLtpEVYIOYhoPE8Z1DIqeMXZdbOCJ90Ls4Z6cSQuZvV07DsDzuqKpNf9EXSKsQuRYuoWv5ZFhp4bscOx8/s1600/image.gif" height="320" width="284" /></a></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/03681383666404797056noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5544343987024143610.post-11086535595414919192014-05-22T09:03:00.000-07:002014-05-22T09:03:03.159-07:00இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDW4N3rwEtg5yU6VACVITvZl65L4-9-P0zXe9CwWKC8oGzDilZsTquLwSbTisoCXPdrpcjcpTnwADifMtbhUkFweUmxBRrx0UakmPF7DV0l0Uo8Vn_qS3g4Qf0-N-RPZPQRHaCdaBbAKs/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDW4N3rwEtg5yU6VACVITvZl65L4-9-P0zXe9CwWKC8oGzDilZsTquLwSbTisoCXPdrpcjcpTnwADifMtbhUkFweUmxBRrx0UakmPF7DV0l0Uo8Vn_qS3g4Qf0-N-RPZPQRHaCdaBbAKs/s1600/image.jpg" height="219" width="320" /></a></div>
அல்லாஹ்வின் திருபெயரால் ....<br />
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !<br />
<br />
உலகில் இஸ்லாமிய வாரிசுரிமை சட்டம் போன்று வேறு எங்கும் எந்த சமுதாயத்திலும் பார்க்கவே முடியாது இத்தகைய சட்டத்தை நம்முடைய மக்கள் ஓரளவாவது தெரிந்துகொள்ளாத காரணத்தால் உரிமையுள்ளவர்களுக்கு சொத்து கிடைக்காமல் போவதும், உரிமையற்றவர்களுக்கு கிடைத்து விடுகின்ற நிலையம், பலருக்கு இலாபமும், சிலருக்கு இழப்பும், சிலருக்கு சொத்து கிடைக்கின்ற வாய்ப்பும் , சிலருக்கு ஏமாற்றத்தை தருகின்ற நிலைமைகளும் ஏற்பட்டுவிடுகின்றன- இன்னும் சிலரோ பெண் பிள்ளைகளுக்கு சட்டப்படி கொடுக்காமல் எதோ ஒரு தொகையை கொடுத்து இது வாப்பா உடைய சொத்தில் உனக்கு சேரவேண்டிய பாகம் என்று கூறி கணக்கை முடித்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட தவறுகள் நடந்துவிடக்கூடாது, உண்மையான வாரிசுகள் யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது,, ஷரீ அத் சட்டப்படி வாரிசுதாரர்களுக்கு பாகங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே இந்நூலை தொகுத்துள்ளேன்.<br />
தொகுப்பாசிரியர் ..<br />
அல்ஹாஜ். மௌலவி H . முஹம்மது ஹனீப் மிஸ்பாஹி<br />
அல்லாஹ் அவர்களுக்கு நற்கிருபைச் செய்வானாக!!!<br />
<a name='more'></a><br />
<br />
அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ் மனிதனைப்படைத்து, அவனுக்குத் தேவையான அனைத்தையும் படைத்துள்ளான் அவற்றையெல்லாம் தன் வசப்படுத்தி சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் திடீரென்று ஒரு நாள் அனைத்தையும் விட்டு விட்டு காலமாகிவிடுகிறான் . அப்போது அவன் விட்டுச் சென்ற சொத்துகளுக்கு வாரிசுகள் யார் யார் யார் யாருக்கு எந்தெந்த விகிதாச்சாரத்தில் பாகங்கள் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற விஷயங்களை விளக்கி கூறுவதே வாரிசுரிமை சட்டங்களாகும்.<br />
<br />
உலகில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஏதோ ஒரு அடிப்படையில் வாரிசுரிமை சட்டங்கள் இருக்கின்றன. மேலும் சில சட்டங்கள் சட்டவல்லுனர்களால் தொகுக்கப்பட்டு உள்ளன. ஆனால், அவைகள் காலத்திற்கேற்ப மாற்றப்படலாம் திருத்தங்கள் செய்யப்படவும் தோதுவான விதிமுறைகளை கொண்டதாகவும் உள்ளன. மேலும் தேவைகேற்ப புதிய சட்டங்களை சேர்ப்பதற்கும் வழி வகைகள் உள்ளன.<br />
<br />
ஆனால் இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்கள் என்பது அல்லாஹ்வால் மனிதகுலத்துக்கு அருளப்பட்ட சட்டங்களாகும், எனவே அவற்றில் திருத்தங்கள் செய்யவோ , மாற்றங்கள் செய்யவோ , கூட்டவோ, குறைக்கவோ, புதிதாக எதனையும் சேர்க்கவோ முடியாது, அதற்குரிய அதிகாரம் யாருக்கும் கிடையாது . காரணம் அதற்கான அவசியமோ, தேவையோ உலகம் முடியும் வரையிலும் ஏறபடப்போவதில்லை. இந்த சட்டம் திருக்குர் ஆன் என்று உலகுக்கு அருளப்பட்டதோ அன்று முதல் [அதாவது -1430 ஆண்டுகளாக] இன்று வரை முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இனியும் அவ்வாறே உலகம் உள்ளவரை பாதுகாப்பாவே இருந்து கொண்டிருக்கும்.<br />
<br />
அத்திருமறை கூறுகின்ற சட்டம்தான் இஸ்லாமியர்களின் வாரிசுரிமை சட்டமாகும்,, ஆனாலும் இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணிவிடக் கூடாது . ஏனெனில் திருக்குர் ஆன் உலகப் பொதுரை ,, அது கூறுகின்ற சட்டங்கள் அனைத்துமே மனித வாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டக்கூடியதாகவும் , ஏற்று நடப்பதற்கு இலகுவானதாகவும் இருக்கின்றன . எனவே , அதனை யார் வேண்டுமானாலும் ஆராயலாம். அதன்படி நடந்து வாழ்க்கையில் வெற்றியும் பெறலாம்.<br />
<br />
அல்லாஹ் தன் திருமறையில் [இறந்து விட்ட] பெற்றோரோ, உறவினரோ விட்டுச்சென்ற [சொத்] திலிருந்து ஆண்களுக்கும் பாகம் இருக்கிறது [அவ்வாறே] பெற்றோரோ உறவினரோ விட்டுச்சென்ற [சொத்]திலிருந்து பெண்களுக்கும் பாகம் இருக்கிறது,, அச்சொத்திலிருந்து குறைவாக இருந்தாலும் அல்லது அதிகமாக இருந்தாலும் - [இது அல்லாஹ்வினால்] விதிக்கப்பட்ட பாகமாக அமைக்கப்பெற்றுள்ளது'' என்று கூறுகிறான்.<br />
அல்குர் ஆன் ..4-7]<br />
<br />
இந்த சட்டம் மிகவும் விரிவானதும், நிறைய உட்பிரிவுகளை கொண்டதும். மிக மிக நுட்பமானதாகும் . இதனை அவ்வளவு இலகுவில் யாராலும் புரிந்து கொள்ளவோ விளக்கிக் கூரிடவோ முடியாது. அதற்கென ஒதிப்படித்த கண்ணியயத்திற்குரிய உலமா பெருமக்களில் உள்ள சட்ட மேதைகளால் மட்டுமே அதற்குரிய விளக்கங்களை கூற முடியும் அவர்களே இஸ்லாமிய ஷரீ அத் சட்டத்தின் நீதிபதிகளாவார்கள் . அவர்களுக்கு முஃப்திகள் என்று கூறப்படும்.<br />
<br />
பாகபிரிவினை மற்றும் ஷரீஅத் சட்டங்களைப் பொருத்தவரை மரியாதைக்குரிய அந்த முஃப்திகள் வழங்குகின்ற ஃ பத்வா என்னும் அந்த தீர்ப்பே சரியானதும் முடிவானதுமாகும் மேற்கொண்டு எங்கு சென்றாலும் அதே தீர்ப்புதான் கிடைக்கும் அதற்கு அப்பீலே கிடையாது.<br />
<br />
இத்தகைய அற்புதமான சட்டத்தைப் பற்றி நபி [ஸல்] அவர்கள், ''வாரிசுரிமை சட்டத்தை கற்றுக்கொள்ளுங்கள் அதனை பிறருக்கும் கற்றுகொடுங்கள் , நான் மரணமடையும் மனிதனாக இருக்கிறேன் '' என்று கூறியுள்ளார்கள் .<br />
<br />
இந்த ஹதீஸ் , வாரிசுரிமை சட்டம் என்பது காலா காலத்துக்கும் மனித குலத்துக்கும் அவசியம் தேவைப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது , எனவே அதனை ஒவ்வொரு முஸ்லீமும் அறிந்து அதன்படி செயலாற்றுவது அவசியமாகும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.<br />
<br />
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த அந்த சட்டங்களுக்கு சொந்தக்காரர்களாகிய முஸ்லீம்களின் பெரும்பாலானவர்கள் , அதைப்பற்றி கொஞ்சங்கூட தெரிந்து கொள்ளாமலும், தெரிந்து கொள்ள முயற்சிக்காமலும் இருப்பது வருந்தத்தக்க விஷயம் என்றுதான் கூற வேண்டும்.<br />
<br />
இப்படிப்பட்ட மக்களால் உரிய வாரிசுதாரர்களுக்கு முறைப்படி சேர வேண்டிய சொத்துக்கள் போய் சேராமல் தடை ஏற்பட்டு விடுகிறது. சிலர் லாபம் அடையவும் சிலர் பாதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது .<br />
<br />
மேலும் பாகபிரிவினை சட்டத்தில் உள்ள நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்ளாமல், ஒருவர் சொத்தை மற்றொருவர் பெயரில் எழுதுவது, அதாவது மனைவி சொத்தை கணவன் பெயரில் , கணவன் சொத்தை மனைவி பெயரில் , மகனின் சொத்தை தகப்பன் பெயரில் தகப்பன் சொத்தை மகனின் பெயரில் எழுதுவது, அதே போன்று ஒரு மனையில் மற்றவர் பணம் போட்டு வீடு கட்டுவது போன்ற காரியங்களை செய்துவிடுகிறார்கள் .<br />
<br />
இதனால் அந்த சொத்து பின்வரும் சந்ததிகளுக்கு முறைப்படி போய் சேராமல் வேறு சிலருக்கு போய் சேர்ந்து விடுகிறது அதுமட்டுமல்ல , அதனால் பல சிக்கல்களும் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு விடுகின்ற வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன .<br />
<br />
இன்ஷாஅல்லாஹ் தொடரும் ஒவ்வொரு தலைப்பிலும் ...........<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCue-A22rnFNYam6EYykRgpva_Y1ifY82Cj3byWdF338SEkn1fmOkqY6gX2FG-YQXJvEVL_OKb7QGkNRwahkOp5PJstc4ADZkUU4dBwfSK3-A57gtIlcI5UfDhCJgqxVU_umKs1o0nUHM/s1600/image.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCue-A22rnFNYam6EYykRgpva_Y1ifY82Cj3byWdF338SEkn1fmOkqY6gX2FG-YQXJvEVL_OKb7QGkNRwahkOp5PJstc4ADZkUU4dBwfSK3-A57gtIlcI5UfDhCJgqxVU_umKs1o0nUHM/s1600/image.gif" /></a></div>
<br />
<br />
<br /></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/03681383666404797056noreply@blogger.com0